கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு படிக்க வச்ச கணவன்! அரசு வேலை கிடைத்த அடுத்த நொடியே மனைவி செய்த துரோகம்! கலங்கி நின்ற கணவன்.. வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!!
உத்தரப் பிரதேசத்தில் கூலி வேலை செய்து மனைவியை படிக்க வைத்த கணவரை, அரசு வேலை கிடைத்ததும் பிரிந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மனைவியை கஷ்டப்பட்டு படிக்க வைத்து அரசு வேலை வாங்கிக் கொடுத்த கணவர் தற்போது காவல் நிலையத்தில் நீதி கேட்டு அலைந்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த இளைஞரின் வாழ்க்கையில் நடந்த இந்த திருப்பம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
ராஜேஷ் வர்மா என்ற இளைஞர், தினக்கூலி வேலை செய்து வந்த நிலையில் தனது மனைவி ரேணுவை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் பல சிரமங்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. தகவலின்படி, அவர் தனது மனைவியை ஏ.என்.எம் செவிலியர் படிப்பில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.
கூலி வேலை செய்து மனைவியை படிக்க வைத்த கணவர்
பல ஆண்டுகள் கடினமாக உழைத்து படிப்பு செலவுகளை சமாளித்த ராஜேஷ், குடும்ப தேவைகளையும் பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேணு தனது படிப்பை வெற்றிகரமாக முடித்து மருத்துவமனையில் வேலைக்கும் சேர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மனைவியின் தலையை வெட்டி வீதியில் கொண்டு சென்ற கணவன்! கொலை நடுங்க வைக்கும் கொடூரம்!!!
ஆனால் வேலை கிடைத்த சில காலத்திலேயே, ரேணு தனது கணவருடன் வாழ மறுத்து தனியாக பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஷ், தனது மனைவி மீது புகார் அளிக்க காவல் நிலையத்தை நாடியுள்ளார்.
காவல் நிலையத்தில் நீதி கேட்ட கணவர்
தற்போது அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வேலை கிடைத்த பிறகு மனைவி தன்னை விட்டு சென்றுவிட்டதாக ராஜேஷ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, கூலி தொழிலாளி ஒருவரின் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.