×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுற்றுலா வந்த பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம்; நல்லவன் போல பாவித்து பயங்கரம்.!

சுற்றுலா வந்த பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம்; நல்லவன் போல பாவித்து பயங்கரம்.!

Advertisement

 

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் பெண்மணிக்கு போதைப்பொருள் கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 35 வயது மதிக்க பெண்மணி சுற்றுலா வந்துள்ளார். அவர் வாரணாசி நகரின் அழகை சுற்றிப்பார்க்க விரும்பியுள்ளார்.

அப்போது, அவரிடம் அறிமுகமான நபரொருவர், மூன்று நாட்கள் வாரணாசியை சுற்றிக்காண்பிப்பதாக தெரிவித்துள்ளார்.3 நாட்கள் வாரணாசியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பெண்ணை அவர் அழைத்து சென்றுள்ளார்.

இறுதியாக, 3 ம் நாளில் இரவில் நபர் குளிர்பானம் கொடுக்கவே, அதனை பெண்மணி குடித்ததும் மயங்கியுள்ளார்.  மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவர் ஆடைகள் இல்லாமல் இருந்துள்ளார். 

மேலும், பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டுள்ளன. அவர் போதையில் இருப்பது போல தோன்றித்தால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். 

அப்போதுதான் அவர் குடித்த குளிர்பானத்தில் போதை பொருள் கலக்கப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, பெண்மணி வாரணாசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கயவனை அதிகாரிகள் கைது செய்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #India #sexual abuse #police #Investigation #உத்திர பிரதேசம் #பாலியல் பலாத்காரம்
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story