தாய்வழி பாட்டி வீட்டிற்கு சென்று வந்த அடுத்த நாளே.... கிணற்றில் மிதந்த 16 வயது சிறுமியின் உடல்! அங்கு நடந்தது என்ன.? பகீர் வீடியோ...!!!
உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் 16 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் 16 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி வந்தனா என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
கிணற்றில் மீட்கப்பட்ட சிறுமியின் உடல்
சோன்பத்ரா மாவட்டத்தின் ராபர்ட்ஸ்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட பஹுவாரா கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த வந்தனா, சம்பவத்திற்கு முந்தைய நாள்தான் தனது தாய்வழி பாட்டி வீட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் கிணற்றில் சடலமாகக் கிடப்பதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், வந்தனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர ஆய்வு
தாய்வழி பாட்டி வீட்டிலிருந்து திரும்பிய மறுநாளே சிறுமி உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நண்பனுக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ்! பெற்ற தாயை நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு உயிரை மாய்துக்கொண்ட கல்லூரி மாணவன்..! அதிர்ச்சி சம்பவம்..!!!