×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரும்பு கம்பி மீது மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு; ஊர்வலத்தில் தலைதெறிக்க ஓடிய மக்கள்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

இரும்பு கம்பி மீது மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு; ஊர்வலத்தில் தலைதெறிக்க ஓடிய மக்கள்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

Advertisement

 

உயரமான கம்பிகளை கைகளில் தூக்கி செல்லும்போது கவனமாக செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் மாவட்டத்தில் உள்ள ஆலம் பகுதியில், மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மதகுருமார்கள் தலைமையில் கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. 

அப்போது, அங்குள்ள இரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்டபோது, உயரமாக இருந்த கொடி இரயில்வே மின்சார கம்பிகளின் மீது உரசியதில், கம்பிகளின் வழியே மின்சாரம் பாய்ந்தது. 

சற்றும் எதிர்பாராத நொடிப்பொழுதில் நடந்த சம்பவத்தில் சிலர் மின்சாரம் தாக்கப்பட்டு நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தனர். பதறிப்போன சிலர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #India #up #Electrode Attack
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story