×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செலவுக்கு ரூ.500 பணம் கொடுக்க மறுத்த தந்தை கொடூர கொலை: மகன் வெறிச்செயல்.!

செலவுக்கு ரூ.500 பணம் கொடுக்க மறுத்த தந்தை கொடூர கொலை: மகன் வெறிச்செயல்.!

Advertisement

 

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி பகுதியை சேர்ந்தவர் த்ரிலோகி. இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

இவரின் மகன் சஞ்சய் (வயது 25). சம்பவத்தன்று சஞ்சய் தனது தந்தையிடம் இருந்து செலவுக்கு ரூ.500 பணம் கேட்டுள்ளார். தந்தையோ தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் தனது செலவுக்கு பணம் தரவேண்டி தந்தையிடம் பிரச்சனை செய்ய, இருதரப்பு வாக்குவாதம் நடந்துள்ளது. 

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சஞ்சய், தனது தந்தையை கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் திரிலோகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள், தலைமறைவான சஞ்சயை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UttarPradesh #Crime news #குற்றம் #உத்திரபிரதேசம் #murder case #Raebareli
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story