×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிரவைக்கும் பயங்கரம்.. ஒரே குடும்பத்தில் 5 பேர் அடித்தே கொலை.. கண்ணீரில் உறவினர்கள்.. அனாதையான 5 வயது சிறுமி.!

அதிரவைக்கும் பயங்கரம்.. ஒரே குடும்பத்தில் 5 பேர் அடித்தே கொலை.. கண்ணீரில் உறவினர்கள்.. அனாதையான 5 வயது சிறுமி.!

Advertisement

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராம்குமார் யாதவ் (வயது 55). இவரின் மனைவி கூசும் தேவி (வயது 52). தம்பதியின் மகள் மனீஷா (வயது 27), மருமகள் சவீதா (வயது 27). ராம்குமாரின் பேத்தி மீனாக்ஷி (வயது 2). 

இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று வீட்டில் மர்மமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டவாறு பிணமாக இருந்துள்ளனர். காவல் துறையினருக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், வீடு தீப்பிடித்து எரிவதாக தகவல் தெரிவிக்கவே, தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்துள்ளனர். 

ஆனால், குறிப்பிட்ட தீவிபத்திற்கான அடையாளம் இல்லாத நிலையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில் வீட்டில் இருந்த ஐந்து பேர் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக இருப்பது அம்பலமானது. இந்த தாக்குதலில் 5 வயது பச்சிளம் குழந்தையான சாக்ஷி என்பவர் மட்டும் உயிர்தப்பி இருக்கிறார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விசாரணை நடந்து வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Prayagraj #family #Murder #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story