×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 தம்பிகளுக்கு மனைவியை விருந்தளித்த கணவன்; சீரழித்த மிருகங்கள்.. இயற்கைக்கு மாறாக கொடுமை செய்து குடும்பமாக பயங்கரம்.!

3 தம்பிகளுக்கு மனைவியை விருந்தளித்த கணவன்; சீரழித்த மிருகங்கள்.. இயற்கைக்கு மாறாக கொடுமை செய்து குடும்பமாக பயங்கரம்.!

Advertisement

 

வரதட்சணை பணம் கொடுக்க மறுத்த பெண்மணி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரால் பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்யப்பட்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ பிலிபிட் மாவட்டம், சுன்கர்ஹி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 37 வயதுடைய பெண்மணி தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று  முடிந்துள்ளது. தற்போது வரை தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இது தொடர்பாக மருத்துவமனையில் பரிசோதித்த போது, பெண்மணி குழந்தை பெறும் உடற் தகுதியோடு இருந்தாலும், அவரது கணவருக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. 

இதனால் தனக்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த கயவன், தனது உடன் பிறந்த 3 சகோதரர்களுடன் பெண்மணி உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தி இருக்கிறான். இல்லாத பட்சத்தில் ரூ.5 இலட்சம் ரொக்கம், கார் வரதட்சணையாக பெற்றோரிடம் பெற்றுவருமாறு வற்புறுத்தி இருக்கின்றனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து குடும்பமாக கொடுமை செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி பெண்மணி கணவர் மற்றும் அவரது சகோதரர்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்மணி தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண்ணின் கணவர், அவரது பெற்றோர் மற்றும் மூன்று சகோதரர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்து இருக்கின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Women #Forced Sex #India #dowry #gang rape
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story