×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Ex-எம்.எம்.ஏ மகன் மீது பலாத்கார வழக்கு., 4 மாத தேடலுக்கு பின் கைதான காமுகன்..!

Ex-எம்.எம்.ஏ மகன் மீது பலாத்கார வழக்கு., 4 மாத தேடலுக்கு பின் கைதான காமுகன்..!

Advertisement

பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மகன் காவல் துறையினரால் 4 மாதங்கள் தேடலுக்கு பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் உத்திரபிரதேசம் மாநிலத்தில், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் பலரின் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பல வழக்குகள் விசாரணை நடைபெறாமல் நிலுவையில் இருக்கின்றன. 

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜய் மிஸ்ரா, 4 முறை தொடர்ச்சியாக எம்.எல்.ஏ-வாக இருந்தவர். இவரின் மீது கொலை மிரட்டல், மோசடி வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2020-ல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதற்கிடையே விஜய் மிஸ்ராவின் மகன் விஷ்ணு மிஸ்ரா இளம்பெண்ணை கடத்திச்சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு 2020-ல் பதிவானது. காவல் துறையினர் விஜய் மிஸ்ராவை கைது செய்ய முயன்ற போது அவன் தலைமறைவாவகவே, அவனுக்கு சன்மானம் அறிவித்தும் பலனில்லை.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் விஜய் மிஸ்ரா இருப்பதாக உத்திரபிரதேச காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, புனேவிற்கு சென்ற காவல் துறையினர் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த காமுகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Sexual Harassment #India #police #investigaton
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story