×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கார் - டிரக் மோதி பயங்கர விபத்து: தீப்பிடித்து எரிந்ததால் 8 பேர் உடல் கருகி பலி.! பதைபதைப்பு வீடியோ வைரல்.!

கார் - டிரக் மோதி பயங்கர விபத்து: தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியான சோகம்.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி, போஜ்புரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் ஒன்று ட்ரக்குடன் மோதி விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் கார் டிரக்குடன் இழுத்து செல்லப்பட்டது, தீப்பிடித்து எரியத்தொடங்கியது. கார் மூடப்பட்டு இருந்ததால், விபத்தில் சிக்கியவர்கள் வெளியே வரவும் முடியவில்லை. 

இதனால் காரில் தீப்பிடித்து எரியத்தொடங்கியதும், ஒட்டுமொத்த வாகனமும் எரிந்து 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 ஆடவர்கள் மற்றும் ஒரு குழந்தை பலியாகியது உறுதியாகியுள்ளது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் & காவல் துறையினர், கருகிய நிலையில் 8 பேரின் உடலையும் மீட்டனர். 

விபத்தில் உயிரிழந்தது யார்? எங்கிருந்து எங்கு சென்றுகொண்டு இருந்தார்கள்? என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Bareilly #car accident #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story