#BigNews: அயோத்தியில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு, மக்கள் அச்சம்.!
#BigNews: அயோத்தியில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு, மக்கள் அச்சம்.!
அயோத்தி நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள டெல்லி, இமாலய மலைத்தொடர், ஜம்மு காஷ்மீர், அசாம், சிக்கிம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் பதிவாகி வருகிறது. அவ்வப்போது பெரிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் நிலநடுக்கம் மக்களால் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. அயோத்தி நகரில் இருந்து 178 கி.மீ தொலைவில் வடக்கு திசையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362