ஒன்றா இரண்டா? தொடரும் அவலம்... இளைஞரை கடுமையாக தாக்கி சிறுநீர் கழித்த பயங்கரம்.. அடுத்த அதிர்ச்சி சம்பவம்.!
ஒன்றா இரண்டா? தொடரும் அவலம்... இளைஞரை கடுமையாக தாக்கி சிறுநீர் கழித்த பயங்கரம்.. அடுத்த அதிர்ச்சி சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் வசித்து வரும் ஆதித்யா என்ற இளைஞர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மற்றொரு இளைஞரை கடுமையாக தாக்கி சிறுநீர் கழித்து நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக எவ்வித புகாரும் இன்று வரை பெறப்படாத நிலையில், வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை தந்தது.
இதனையடுத்து, இவ்விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூரஜ் ராய் விசாரணை நடத்த உத்தரவிட்டதன் பேரில் ஆதித்யா அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.