×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நம்பவே முடியல.... 31 வயது பெண் 5 நாள் இடைவெளியில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த அதிசயம்! மருத்துவர்களே ஆடிப்போன அந்த தருணம்!!!

உத்திரபிரதேசத்தின் மொராதாபாத்தில் 31 வயது பெண் ஒருவர் 5 நாட்கள் இடைவெளியில் 4 குழந்தைகளை சுகப்பிரசவமாக பெற்ற சம்பவம் மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

உத்திரபிரதேசத்தின் மொராதாபாத் பகுதியில் அரிய மருத்துவ நிகழ்வு ஒன்று மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சம்பல் பகுதியைச் சேர்ந்த 31 வயதான அமீனா என்ற பெண், 5 நாட்கள் இடைவெளியில் நான்கு குழந்தைகளுக்கு பிறப்பு அளித்துள்ளார். அதிலும் அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சையின்றி சுகப்பிரசவம் மூலம் பிறந்தது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

5 நாட்கள் இடைவெளியில் பிறந்த குழந்தைகள்

தகவலின்படி, அமீனாவுக்கு கடந்த மே 9ஆம் தேதி முதல் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மீதமுள்ள மூன்று குழந்தைகளும் மே 14ஆம் தேதி பாதுகாப்பாகப் பிறந்தன. பொதுவாக நான்கு குழந்தைகள் கர்ப்பமாக இருக்கும் சூழலில் சிசேரியன் முறையே தேர்வு செய்யப்படும் நிலையில், இந்தப் பிரசவம் முழுவதும் இயல்பான முறையில் நடந்தது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அடேங்கப்பா... ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா? அந்த அம்மாவின் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிகையை பாருங்க! நெகிழ்ச்சி சம்பவம்...

கர்ப்ப காலத்திலேயே இருந்த சிக்கல்கள்

மருத்துவர்கள் கூறுகையில், கர்ப்ப காலம் ஆரம்பத்திலிருந்தே சவாலாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். அமீனாவுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவக் குழு சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தாயும் குழந்தைகளும் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டனர். மேலும் நான்கு குழந்தைகளும் தனித்தனி பனிக்குடங்களில் வளர்ந்திருந்தது இந்த வழக்கின் முக்கிய அம்சமாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்களின் முயற்சிக்கு பாராட்டு

இத்தகைய அதிக ஆபத்துகள் நிறைந்த கர்ப்ப நிலையிலும், மருத்துவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதே இந்த வெற்றிக்குக் காரணம் என கூறப்படுகிறது. தற்போது அமீனாவும் நான்கு குழந்தைகளும் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்து நலமாக தேறி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: 7 வருஷமாக பயங்கர தலைவலியால் அவதிப்பட்ட பெண்! ஸ்கேனில் தெரிந்த அந்த ஒரு உருவத்தை பார்த்து அதிர்ந்துப்போன மருத்துவர்கள்! நடுங்க வைக்கும் உண்மை சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #சுகப்பிரசவம் #Moradabad #நான்கு குழந்தைகள் #Medical miracle
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story