×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை: 2 பேர் பலி., 2 உயிர் ஊசல்.!

3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை: 2 பேர் பலி., 2 உயிர் ஊசல்.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சந்த் கபீர் நகர் மாவட்டம், செமரியாவான் கிராமத்தில் வசித்து வரும் 28 வயது பெண்மணி ஃபிர்தௌஸ், மனநல பாதிப்புடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இவர் அவ்வப்போது மட்டுமே அதுசார்ந்த பிரச்சனையை சந்தித்து வந்ததால், அப்பகுதியை மரூப் அகமது என்பவருடன் திருமணம் செய்து வைத்து, தற்போது அவருடன் குடித்தனம் நடத்தி வருகிறார். 

இந்த தம்பதிக்கு அக்ரம் (5), அர்ஹம் (3) குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக மூன்றாவதாக பிரசவம் நடந்து குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், பெண்மணி தனது குழந்தைகளை அழைத்துவந்து வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் வீசி, தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் குதித்த பச்சிளம் குழந்தை மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். 

தாய் மற்றும் அவரின் 5 வயது மகன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் எதற்காக இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Latest news #Crime news #உத்திர பிரதேசம் #குற்றம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story