நள்ளிரவு 12 மணிக்கு மனைவியை வர சொன்ன கணவன்! மறுத்ததால் 5 மாத குழந்தையை அந்தரத்தில் தொங்கவிட்டு மிரட்டல்! சுமார் 20 அடி உயரத்தில் இருந்து நொடியில் குழந்தையை கீழே.... கொலை நடுங்க வைக்கும் சம்பவம்!!!
உத்தரப் பிரதேசம் பதாயூனில் குடும்ப தகராறில் ஆவேசம் கொண்ட தந்தை 5 மாத குழந்தையை மாடியில் இருந்து வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேசம் பதாயூன் பகுதியில் குடும்ப தகராறு விபரீதமாக மாறி, 5 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆவேசமடைந்த தந்தை இந்த கொடூர முடிவை எடுத்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. சம்பவத்துக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நள்ளிரவு வாக்குவாதம் கடுமையாகியது
பதாயூன் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர், மனைவியின் தாய் வீட்டில் தங்கி இருந்தனர். தகவலின்படி, நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்போது, மனைவியை உடனே தன்னுடன் வருமாறு கணவன் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மிரட்டல் விபரீதமாக முடிந்தது
மனைவி மறுத்ததால் ஆவேசம் அதிகரித்த அந்த நபர், 5 மாத குழந்தையை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்றார். அங்கு குழந்தையை விளிம்பில் தொங்கவிட்டு, வராவிட்டால் கீழே வீசிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் கெஞ்சியபோதும், அவர் எதையும் கேட்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையை கீழே தள்ளியதால், சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த பச்சிளம் குழந்தை மரணம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
போலீஸ் நடவடிக்கை மற்றும் கைது
இதையடுத்து கோபமடைந்த உறவினர்கள், அந்த நபரை பிடித்து ஒரு அறையில் பூட்டினர். தகவல் அறிந்த போலீசார் இன்று காலை வந்து, தப்பிச் செல்ல முயன்ற அவரை கைது செய்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. குடும்ப தகராறில் ஏற்பட்ட இந்த தந்தை கொடூரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்போன் பயன்பாட்டால் மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவன்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!!