×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிஞ்சு குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு! கவனக்குறைவால் இரு பிள்ளைகளையும் இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..

பிஞ்சு குழந்தைக்கு என்ன தெரியும்! இரு பிள்ளைகளையும் இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..

Advertisement

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு துயரமான சம்பவம் மக்கள் மனதை உலுக்கியுள்ளது. ஒரு ஒன்றரை வயது குழந்தை, கொதிக்கும் சுண்டல் பானையில் தவறி விழுந்து உயிரிழந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜான்சி பகுதியைச் சேர்ந்த கோல்கப்பா விற்பனையாளர் சைலேந்திராவின் மகள் பிரியா. இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் துத்தி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்கள்.  ஜூன் 27 அன்று, சுண்டலை அடுப்பில் வைத்து, சற்று வெளியே சென்றிருந்த அம்மா பூஜா வீடு திரும்பியபோது, அந்த கொதிக்கும் பானையில் விழுந்திருந்த தனது குழந்தையை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குழந்தையை உடனே CHC சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றதின்பின், மருத்துவர்கள் அவளின் நிலைமை மோசமடைந்ததைக் கவனித்தனர். மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும், சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.

இதையும் படிங்க: ஆட்டோவில் சிக்கிய சேலை! நடுரோட்டில் பெண் செய்த காரியத்தை பாருங்க! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

இந்த சம்பவத்தின் பின்னணியில் இன்னொரு வேதனையான செய்தி உள்ளது. இரண்டே வருடங்களுக்கு முன், இதே குடும்பத்தில் உள்ள மூத்த மகள் சௌம்யா, அதேபோன்று ஒரு கொதிக்கும் பருப்புத் துண்டியில் விழுந்து உயிரிழந்திருந்தார். இதனால் அந்த குடும்பம் இரு குழந்தைகளையும் இழந்த தீராத துயரத்தில் தவிக்கின்றது.

தந்தையான சைலேந்திரா கூறுகையில், "இரண்டு வருடங்களுக்கு முன் என் முதல் மகளை இழந்தேன். இப்போது என் இரண்டாவது மகளும் என்னை விட்டு சென்றுவிட்டாள். என் வாழ்க்கையே இவங்கதான். இப்போது என் வாழ்நாள் துயரம்தான்" என கூறியபோது, அவரது கண்ணீரும், வார்த்தைகளும் அனைவரின் மனத்தையும் பாதித்தது.

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தேவை

இந்த நிகழ்வுகள், குழந்தைகளை வீட்டில் தனியாக வைக்கும்போது ஏற்படும் அபாயங்களை அனைவரும் சிந்திக்க வைக்கும். ஒரே குடும்பத்தில் இரு குழந்தைகள், ஒரே காரணத்தால் உயிரிழந்தது, பாதுகாப்பு குறைவின் கசப்பான நினைவாக உள்ளது. பெற்றோர்களும், சமூகமும் இத்தகைய சம்பவங்களை மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.

 

இதையும் படிங்க: குழந்தை சாக்லேட் கேட்டது ஒரு தப்பா! 4 வயது மகளை கொடூரமாக கொன்ற குடிகார தந்தை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கோல்கப்பா tragedy #boiling sundal death #Sonbhadra incident #குழந்தை விபத்து #Uttar Pradesh tragedy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story