×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆத்தாடி...!! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒரு டிக்கெட் விலை ரூ.1.50 கோடி.!!

ஆத்தாடி...!! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒரு டிக்கெட் விலை ரூ.1.50 கோடி.!!

Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  நாள் முழுவதும் பெருமாளை தரிசிக்க புதிதாக உதய அஸ்தமன சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாதத்துடன் காலையில் நடை திறந்தது முதல் அர்ச்சனை, தோமாலை, கல்யாண உற்சவம், ஏகாந்த சேவை என இரவு வரை பல்வேறு சேவைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக தனித்தனி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு, அதனை முன்பதிவு செய்யும் பக்தர்கள் அந்தந்த சேவைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், நாள் முழுவதும் பெருமாளை தரிசிக்கும் வகையில் உதய அஸ்தமன சேவை என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் பெருமாளை தரிசிக்க விரும்புபவர்கள் சாதாரண நாட்களில் ஒரு கோடி ரூபாயும், அபிஷேகம் நடத்தப்படும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்றரை கோடி ரூபாயும் செலுத்த வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்த சேவையில் கட்டணம் செலுத்தி பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆண்டுக்கு ஒரு முறை என 25 ஆண்டுகளுக்கு பெருமாளை தரிசிக்க முடியும். உதய அஸ்தமன சேவையில் சேரும் நிதி, குழந்தைகள் நல மருத்துவமனைக்கு செலவு செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க  உதய அஸ்தமன சேவைக்கான 531 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. விரைவில் இதற்கான முன்பதிவு ஆன்லைனில்  வெளியீடு செய்வதற்காக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thirumala #ticket
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story