கொடுமையின் உச்சகட்டம்... 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு... கோவில் பணியாளர்கள் 2 பேர் கைது.!
கொடுமையின் உச்சகட்டம்... 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு... கோவில் பணியாளர்கள் 2 பேர் கைது.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தின் சாட்னாவிலிருந்து 45 கி.மீ. தொலைவில் மெய்ஹாா் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றில் பணியாளர்களாக இருந்து வருபவர்கள் ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் பதோலியா. இவர்கள் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள 12 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.