×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீனுக்கு வீசிய தூண்டிலில் சிக்கிய பெண்ணின் நிர்வாண உடல்; அலறியடித்து ஓடிய இளைஞர்: தீவிர விசாரணையில் போலீசார்..!

மீனுக்கு வீசிய தூண்டிலில் சிக்கிய பெண்ணின் நிர்வாண உடல்; அலறியடித்து ஓடிய இளைஞர்: தீவிர விசாரணையில் போலீசார்..!

Advertisement

மீன் பிடிப்பதற்காக இளைஞர் வீசிய தூண்டிலில் பெண் ஒருவரின் நிர்வாண உடல் சிக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா அரகெரே கிராமத்தை சேர்ந்த விவசாயி சிக்க தேவராஜா. இவருக்கு சொந்தமான நிலத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் கிராமத்தினர் அடிக்கடி வந்து மீன்பிடிப்பது வழக்கம்.

இந்த நிலையில், ஒரு இளைஞர் சிக்க தேவராஜாவுக்கு சொந்தமான குளத்தில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் வீசியுள்ளார். அவரது  தூண்டிலில் மீனுக்கு பதிலாக, ஒரு பெண்ணின் நிர்வாண உடல் சிக்கியுள்ளது. இந்த உடல் இடுப்புக்கு கீழ் துண்டிக்கப்பட்டு பாதியளவு மட்டுமே இருந்துள்ளது.

இதற்கிடையில், அதே மாண்டியா மாவட்டத்திலுள்ள பாண்டவபுரா தாலுகாவில் உள்ள பேபி என்கிற கிராமத்தில், கால்வாய் ஒன்று ஓடுகிறது. இந்த கால்வாயில், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் மிதந்தபடியே வந்தது. இந்த, பெண்ணின் உடலும் பாதியளவு மட்டுமே இருந்தது. அதாவது, இடுப்புக்கு கீழ் பகுதியை காணோம். கால்வாயில் இப்படி ஒரு கோலத்தை பார்த்த பேபி கிராம மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளனர்.

2 கிராமங்களிலும், 2 வேறு சடலங்களின் துண்டுகளை பார்த்து கதிகலங்கி போன மக்கள், மாவட்ட  காவல்துறை கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் அளித்தூல்ளனர். இதனையடுத்து, பாண்டவபுரா மற்றும் அரகெரே காவல் நிலையங்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் மண்டியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #Mandiya #Srirangapatna #Nude Body #Police Enquiry
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story