×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் திருமணம் செய்த இளைஞரின் தாயை நிர்வாணப்படுத்தி, மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல்: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்.!

காதல் திருமணம் செய்த இளைஞரின் தாயை நிர்வாணப்படுத்தி, மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல்: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்.!

Advertisement

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி பகுதியைச் சார்ந்தவர் அசோக் (வயது 24). இவர் 18 வயதுடைய பிரியங்கா என்ற பெண்மணியை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில், பெண் வீட்டு தரப்பின் எதிர்ப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தரப்பினர் சம்பந்தப்பட்ட இளைஞரின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் வீட்டிலிருந்த அசோக்கின் தாயாரை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கி அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்திருக்கின்றனர்.

மதியம் 12:30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணை மீட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநில முதல்வரும் இது தொடர்பாக தகவலறிந்த நிலையில், விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Karnataka State #Latest news #கர்நாடகா மாநிலம் #Mother naked #Love problem
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story