×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூனியம் வைத்ததாக பெண்ணை தீ-மிதிக்க வைத்து, ஆணிகளில் நடக்க வைத்த பயங்கரம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

சூனியம் வைத்ததாக பெண்ணை தீ-மிதிக்க வைத்து, ஆணிகளில் நடக்க வைத்த பயங்கரம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Advertisement

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் கிராமம், கைலாஷ் நகரில் வசித்து வரும் பெண்மணியை எரியும் நிலக்கரியின் மீதும், ஆணிகள் மீதும் நடக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.

இந்த விஷயம் தொடர்பாக எழுந்த புகரைதொர்ந்து பெண்ணை சித்ரவதை செய்ததாக 2 பெண்கள், 1 ஆண் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்மணியான மம்தாவை கணவரின் சகோதரர், அவரின் மனைவி, சகோதரி ஆகியோர் துன்புறுத்தி வந்துள்ளனர்.

கடந்த மார்ச் 20 ம் தேதி பெண்ணின் கணவர் வெளியே சென்றபோது, மேற்கூறிய மூவர் சேர்ந்து மந்திரவாதியை அழைத்து வந்து 12 முறை கொளுந்துவிட்டு எரிந்த நிலக்கரியை மிதிக்கவைத்து, 9 முறை ஆணிகள் மீது நடக்க வைத்து கொடுமை செய்துள்ளனர். 

இந்த தகவலை கணவரிடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சட்டீஸ்கர் மாநிலம் #சூனியம் #Latest news #State news #இந்தியா #துர்க் கிராமம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story