×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுமியின் கை, கால்களை கட்டி... 2 நாட்கள் தேயிலை தோட்டத்தில் வைத்து நடந்த கொடூரம்... அதிர்ச்சி சம்பவம்...!

சிறுமியின் கை, கால்களை கட்டி... 2 நாட்கள் தேயிலை தோட்டத்தில் வைத்து நடந்த கொடூரம்... அதிர்ச்சி சம்பவம்...!

Advertisement

14 வயது சிறுமியின் கை, கால்களை கட்டி இரண்டு நாட்களாக பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அசாம் தேயிலை தோட்டத்தில் நடந்துள்ளது.

அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் லகோவால் நகரில் பெபேஜியா கிராமத்தில் உள்ள 14 வயது சிறுமி கடந்த 3-ஆம் தேதி காணாமல் போனார். 

இதுகுறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், அத்தபாரி தேயிலை தோட்டத்திற்குள் அந்த சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சுய நினைவின்றி கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

பைஜான் அலி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாய் கடத்தல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பைஜான் அலியை பிடித்து விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. பைஜான் அலி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த பயங்கர செயலை செய்தது தெரியவந்துள்ளது. 

கூட்டாளிகள் இரண்டு பேர் பைஜானுக்கு மதுபானம் வாங்கி கொடுத்துள்ளனர். பைஜான் சிறுமியை கடத்தி சென்று, தேயிலை தோட்டத்தில் வைத்து, கை, கால்களை கட்டி போட்டு இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இது தெரிந்தவுடன் காவல்துறையினர், பைஜானை கைது செய்யப்பட்டதுடன், அவரின் கூட்டாளிகள் நான்கு பேரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை கயிற்றால் கட்டி போட்டு கூட்டு பலாத்காரம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

எஸ்.பி.ஸ்வேதங் மிஷ்ரா, 376-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது என கூறியுள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக திப்ரூகார் கூடுதல் காவல் சூப்பிரெண்டு பிதுல் சேத்தியா கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Assam #Girl Kidnapping #Sexual assault
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story