×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவரை கடத்திய சிறுமி...!! பெற்றோரிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டிய அதிர்ச்சி சம்பவம்..!!

இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவரை கடத்திய சிறுமி...!! பெற்றோரிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டிய அதிர்ச்சி சம்பவம்..!!

Advertisement

மைனர் சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவரை கடத்தி, குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். 

பீகாரில் உள்ள கயா நகரில் ரிஷப் என்ற மாணவர் வசித்து வருகிறார். ஜே.இ.இ. பொறியியல் தேர்வுக்கு தயாராகி வரும் ரிஷப்புக்கு சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் மைனர் சிறுமி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி நேரில் வந்து சந்திக்குமாறு அந்த மாணவனிடம், சிறுமி கூறியுள்ளார். ஆனால், அப்போது மாணவரால் போக முடியாததால் கடந்த 30-ஆம் தேதி சிறுமியை காண நண்பனை அழைத்து கொண்டு ஆவலாக சென்றுள்ளார்.

சிறுமியை பார்த்ததும், நண்பரை திரும்பி அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அந்த சிறுமி மூன்று பேருடன் சேர்ந்து, அந்த மாணவரை கடத்தி சென்றுள்ளார். அதன்பின்னர், அந்த சிறுமி மாணவரின் குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தரவில்லை என்றால், மாணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

பணத்துடன் வரவேண்டிய இடம் குறித்து கேட்டதும் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின், செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். இதனால், மாணவனின் பெற்றோர் காவல்துறையினரிடம் தெரிவித்து உள்ளனர். 

இது தொடர்பாக காவல்துறையினர் மாணவரின் நண்பரிடம் விசாரித்தனர். பின்பு, மாணவரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்துள்ளனர். காவல்துறையின் சிறப்பு விசாரணை குழுவினர் பாட்னா நகரில் சிறுமியை கைது செய்துள்ளனர். 

விசாரணையில் அந்த சிறுமி மைனர் என்று தெரிய வந்தது. சிறுமியுடன் கடத்தலுக்கு உதவிய மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Bihar #Instagram #Kidnapped
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story