×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தற்கொலை செய்த 20 வயது பெண்ணின் கண்கள் திருட்டு: உடல் உறுப்பு விற்கும் கும்பலா?.. அதிர்ச்சியில் உறவினர்கள்.!

தற்கொலை செய்த 20 வயது பெண்ணின் கண்கள் திருட்டு: உடல் உறுப்பு விற்கும் கும்பலா?.. அதிர்ச்சியில் உறவினர்கள்.!

Advertisement

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள படாவூன் மாவட்டம், ரசூலா கிராமத்தைச் சார்ந்தவர் பூஜா (வயது 20). இவருக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில், வரதட்சணை பிரச்சனை காரணமாக தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரின் உடல் காவல்துறையினரால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்த பணியாளர்கள் அவரின் இரண்டு கண்களையும் எடுத்ததாக தெரிகிறது. 

இது தொடர்பாக பெண்ணின் சகோதரர் ராஜ்குமாருக்கு தெரியவரவே, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அவர்களும் உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர். உடல் உறுப்பு திருட்டு தொடர்பான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவமனை பணியாளர்களும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுவதால் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின் குற்றம் உறுதியாகும் பட்சத்தில் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UttarPradesh state #Latest news #உத்திரபிரதேசம் மாநிலம் #கண்கள் திருட்டு #Eyes stolen #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story