×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிவேகம் ஆபத்தில் முடிந்த கொடூரம்; அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் பரிதாப உயிரிழப்பு...!!

அதிவேகம் ஆபத்தில் முடிந்த கொடூரம்; அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் பரிதாப உயிரிழப்பு...!!

Advertisement

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் பகுதியில் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரளா அதிவேக அரசு பஸ் ஒன்று முன்னே சென்ற பைக்கை முந்தி செல்ல முயன்ற போது பைக்கின் பின்பகுதி மோதி பைக்கில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரும் கல்லூரி மாணவரும் பஸ்சின் அடியில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள், பிரஜித் மற்றும் சிகா, இவர்கள் புனலூர் பகுதியை சேர்ந்தவர்கள். பஸ்ஸின் அதிவேகமும் ட்ரைவரின் கவனக்குறைவாலும் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக, விபத்தை பார்த்த பொதுமக்கள் கூறுகின்றனர்.

சிகா என்ற கல்லூரி மாணவி சிகாவின் தலை மீது பஸ்ஸின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். படு காயமடைந்த  கல்லூரி மாணவர் பிரஜித்தும் அதே இடத்தில் உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து சடையமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #KERALA #Kollam #bus accident #college student #died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story