×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜம்முவில் தாறுமாறாக வந்த பேருந்து..300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. பயணிகளின் கதி என்ன..?

ஜம்முவில் தாறுமாறாக வந்த பேருந்து..300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. பயணிகளின் கதி என்ன..?

Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தானது தோடா என்ற பகுதியின் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் தாறுமாறாக வந்த அந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் இதுவரை 33 பேர் பலியானதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த சிலரை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jammu #bus accident #people died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story