உரிமையாளரின் தாலியை உணவு என்று நினைத்து விழுங்கிய எருமை மாடு.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!
உரிமையாளரின் தாலியை உணவு என்று நினைத்து விழுங்கிய எருமை மாடு.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சார்சி என்ற கிராமத்தில் உரிமையாளரின் தாலியை உணவுடன் சேர்த்து எருமை மாடு விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சார்சி கிராமத்தில் உரிமையாளர் ஒருவர் தனது வீட்டில் எருமை மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மாட்டின் உரிமையாளர் எருமை மாட்டிற்கு உணவளிக்க சென்றுள்ளார். அப்போது அவரது தாலி செயின் ஆனது கழண்டு விழுந்துள்ளது. இதனையறிந்த மாட்டின் உரிமையாளர் சுதாரித்துக் கொள்வதற்குள் எருமை மாடு அந்த தாலிச் செயினை உணவுடன் சேர்த்து முழுங்கியுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த எருமை மாட்டின் உரிமையாளர் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மருத்துவர்கள் எருமை மாட்டின் வயிற்றில் இருந்த தாலி செயினை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்து மாட்டின் வயிற்றிலிருந்து லாபகரமாக தாலி செயினை வெளியே எடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.