×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... தொடர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது.!

11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... தொடர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது.!

Advertisement

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது பழங்குடியின சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்  இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது காவல்துறை.

ஆந்திர மாநில தலைநகரான அமராவதி அருகே இருக்கும் மங்களகிரி கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மிரட்டி தொடர்பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களை நச்சுறுத்தலுக்கு பயந்து சிறுமி இதை வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறார்.

அவர்களின் கொடுமை இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கவே  கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமீது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் காவல்துறையிடம் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த லட்சுமணன் உட்பட இரண்டு இளைஞர்களை காவல்துறை கைது செய்து இருக்கிறது.

அவர்களின் மீது போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவத்தால் சிறுவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Andhra Pradesh #Crime #gang rape #Child abuse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story