உடல் முழுவதும் உரோமத்துடன் இருக்கும் குழந்தையை ஈன்ற பெண்மணி... உத்திரபிரதேசத்தில் வினோதம்.!
உடல் முழுவதும் உரோமத்துடன் இருக்கும் குழந்தையை ஈன்ற பெண்மணி... உத்திரபிரதேசத்தில் வினோதம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹரோடி பகுதியை சேர்ந்த பெண்மணி, பிரசவத்திற்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.
குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக, குழந்தையின் உடலில் தலையில் இருந்து வயிறு வரை உரோமங்கள் முளைத்து இருக்கின்றன.
இதனைக்கண்டு மருத்துவ குழுவினர் வியந்துபோனாலும், குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இவ்வாறான செயலை மருத்துவ குழுவினர் Gaint melanocytic Nevus என்று அழைக்கிறார்கள். குழந்தையின் உடலில் 60 % உரோமம் உள்ளது என்றாலும், குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362