×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ருசியாக உணவு சமைத்துக்கொடுக்காத அம்மாவை வெட்டிக்கொலை செய்த மகன்: அதிரவைக்கும் சம்பவம்.!

ருசியாக உணவு சமைத்துக்கொடுக்காத அம்மாவை வெட்டிக்கொலை செய்த மகன்: அதிரவைக்கும் சம்பவம்.!

Advertisement

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தை சேர்ந்தவர், தனது 55 வயது அம்மாவை ருசியான உணவு சமைத்து தரவில்லை என்று கூறி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

தானே மாவட்டத்தில் உள்ள முர்பாத் தாலுகா, வேலு கிராமத்தில் 55 வயதுடைய தாய், தனது மகனுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு மகனுக்கு தாய் சமைத்து உணவு பரிமாறி இருக்கிறார். 

அப்போது, உணவு ருசியாக இல்லை என்று தாயிடம் சண்டையிட்ட மகன், ஆத்திரத்தில் தாயை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து இருக்கிறார். மேலும், தானும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், 55 வயது தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற மகனையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #India #Thane #Son Killed Mother #tasty food #தானே #கொலை #ருசியான சமையல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story