×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உ.பியில் பயங்கரம்... கணவரை கொன்று சடலத்தின் அருகிலேயே படுத்து உறங்கிய கொடூர மனைவி..!

உ.பியில் பயங்கரம்... கணவரை கொன்று சடலத்தின் அருகிலேயே படுத்து உறங்கிய கொடூர மனைவி..!

Advertisement

உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலி நகரில் வசித்து வருபவர்கள் அதுல் - அன்னு தம்பதியினர். அதுல் மது போதைக்கு அடிமையானவர் என்று தெரிகிறது. எனவே இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதுல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அன்னு அங்கு இருந்த பெரிய கல்லைக் கொண்டு கணவர் அதுலை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் அதுல் மயங்கி  விழுந்துள்ளார். மேலும் மயங்கி விழுந்த அவரை கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார் அன்னு. இதன் பின்னர் கணவர் சடலத்தின் அருகே அன்னு படுத்து உறங்கியுள்ளார்.

இதனையடுத்து மறுநாள் காலை ஒன்றும் நடக்காதது போல் வேலைக்கு சென்றுள்ளார் அன்னு. மாலையில் வீடு திரும்பிய அன்னு இரவு அனைவரும் உறங்கிய பின் அதுலின் உடலை இழுத்துச் சென்று வீட்டின் முன்புற வாசலில் போட்டுவிட்டு வீட்டின் உள்ளே சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் அன்னு கத்தி கூச்சலிட்டு தனது கணவர் குடிபோதையில் கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறி அழுது புலம்பியுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அதுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மனைவி அன்னுவிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அன்னுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Family Dispute #husband killed #Wife Arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story