×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கேரளாவில் பயங்கரம்... பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா... தற்கொலை செய்து கொண்ட பேத்தி..!

கேரளாவில் பயங்கரம்... பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா... தற்கொலை செய்து கொண்ட பேத்தி..!

Advertisement

கேரள மாநிலத்தில் தனது தாத்தாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொயிலாண்டி பகுதியில் வசித்து வருபவர் ரியா. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கொயிலாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் விசாரணையில் ரியாவின் தற்கொலைக்கான கடிதம் ஒன்று போலீசார் வசம் சிக்கியது. அந்த கடிதத்தில் கூறியிருப்பது என்னவென்றால் கப்பாட்டை சேர்ந்த ரியாவின் தாத்தா அபுபக்கர் தன்னை பாலில் பலாத்காரம் செய்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரியாவை பலாத்காரம் செய்த அவரது தாத்தா அபுபக்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#college student #Sexual Harrasment #Sucide
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story