×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாவம்.. கட்டுக்கட்டாக பணத்தை பானையில் சேமித்துவைத்திருந்த பன்றி வியாபாரி.. ஒருநாள் பானையை திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..

ரூபாய் 5 லட்சம் பணத்தை இரும்பு பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில் பணத்தை கரையான்

Advertisement

ரூபாய் 5 லட்சம் பணத்தை இரும்பு பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில் பணத்தை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மைலவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஜமலையா. பன்றி வளர்ப்பு தொழில் செய்துவரும் இவர், சிறுக சிறுக சேமித்தது சுமார் 5 லட்சம் ரூபாய் பணத்தை தனது வீட்டில் இருக்கும் ஒரு இரும்பு பெட்டியில் சேமித்து வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் தான் பணம் சேமித்து வைத்த பெட்டியைத் திறந்தபோது, ​​அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவரை சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் கரையான் அரித்திருந்தது. இதனை கண்ட அவரது மொத்த குடும்பத்தினரும் கதறி அளித்துள்ளனர்.

இதனை அடுத்து போலீசார் ஜமலையாவின் வீட்டிற்கு வந்து அவரை சமாதம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள ஜமலையா, “எனது சேமிப்புடன் ஒரு வீட்டைக் கட்ட திட்டமிட்டேன். ஆனால், எல்லா பணத்திலும் துளைகள் காணப்பட்டதால் நான் வருத்தப்பட்டேன்" என தெரிவித்துள்ளார். மேலும் திரு. ஜமலையாவுக்கு வங்கி கணக்கு இல்லாததால், அவர் பணத்தை இரும்பு பெட்டியில் சேமித்து வைத்ததாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viral News #Mysterious
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story