தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுவர் ஏறி குதித்த திருடன்.. தரையில் காத்திருந்த எமன்.. திருடச் சென்ற இடத்தில் உயிர் போன பரிதாபம்.!

சுவர் ஏறி குதித்த திருடன்.. தரையில் காத்திருந்த எமன்.. திருடச் சென்ற இடத்தில் உயிர் போன பரிதாபம்.!

Telungana theft jumbling into wall and fall in an well Advertisement

களவாட சென்ற இடத்தில் திருடன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரை விட்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சரியால் நகரில் ஒரு திருடன் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திருடுவதற்காக ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளான். தரை என்று நினைத்து திருடன் குதித்த இடம் கிணறாக இருந்துள்ளது. 

telungana

எனவே அவன் கிணற்றுக்குள் விழுந்துள்ளான். மறுநாள் காலையான நேற்று வீட்டின் உரிமையாளர் கிணறில் பார்த்தபோது உள்ளே ஒரு பிணம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருடன் சுவர் ஏறி குதித்து கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#telungana #theft #died #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story