×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: பெண், குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.!

2 கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: பெண், குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.!

Advertisement

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாராயணன் பேட்டை மாவட்டத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டு ஐவர் பலியான பரிதாபம் நடந்துள்ளது. 

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த இரண்டு வாகனங்கள் விபத்திற்குள்ளானதும், அதில் பயணித்த ஐவர் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஐவரில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த நாராயணன் பேட்டை காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்?, அவர்கள் யார்?, எங்கு சென்று கொண்டிருந்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#telungana #Narayanan pettai #Accident news #தெலுங்கானா #விபத்து #நாராயணன் பேட்டை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story