தப்பு தான் அதுக்குன்னு இப்படி ஒரு சித்திரவதையா? கொழுந்தனுடன் ஓட்டம பிடித்த மனைவி! தேடி திரிந்த கணவன்...! தனி வீடு எடுத்து நடத்திய வாழ்க்கை... ஆத்திரத்தில் உறவினர்கள் செய்த கொடூரம்!!!
தெலுங்கானாவில் கணவரின் தம்பியுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண் மீது உறவினர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் கணவரின் தம்பியுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஐலாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணுக்கு இந்த சோதனை ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய தகவல்கள் குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
குடும்பத் தகராறின் பின்னணியில் பெண் தாக்கப்பட்டதாகவும், அவரது முகத்தில் மட்டும் மிளகாய்ப் பொடி வீசப்பட்டதாகவும் மேட்பள்ளி டிஎஸ்பி ஏ. ராமுலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கணவரின் தம்பியுடன் மாயமான பெண்
ஐலாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிக்கு, தனது கணவரின் தம்பியான பொச்சய்யாவுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். மனைவி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த கணவர், பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோதி மற்றும் பொச்சய்யாவை தேடி வந்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 2-ஆம் தேதி இருவரும் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகினர். விசாரணையில், தாங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தொடர்ந்து ஒன்றாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
காவல் நிலையத்துக்குப் பிறகு தனியாக வசிப்பு
இருவருக்கும் போலீசார் அறிவுரைகள் வழங்கி கவுன்சிலிங் செய்த பின்னர் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்கள் குடும்பத்தினருடன் செல்லாமல் தனியாக வீடு எடுத்து வசிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பொச்சய்யாவின் உறவினர்கள் மற்றும் சில உள்ளூர்வாசிகளிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் ஜோதி தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. அவரது ஆடைகள் களையப்பட்டு, உடலில் மிளகாய்ப் பொடி மற்றும் 'ஜீடி' திரவம் தடவி சித்ரவதை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
சமூக வலைதள தகவல்களுக்கு போலீஸ் மறுப்பு
இதுகுறித்து விளக்கம் அளித்த மேட்பள்ளி துணை காவல் கண்காணிப்பாளர் ஏ. ராமுலு, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களில் சில உண்மைக்கு மாறானவை என தெரிவித்துள்ளார். குறிப்பாக சாதி பஞ்சாயத்து நடத்தப்பட்டதாகவும், பெண்ணின் ஆடைகளை களைந்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படும் தகவல்களை போலீசார் மறுத்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாகவே ஜோதி தாக்கப்பட்டதாகவும், அவரது முகத்தில் மட்டுமே மிளகாய்ப் பொடி வீசப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண் தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடையவர்களிடம் போலீசார் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விவசாய நிலத்தில் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு கிடந்த ஆண் சடலம்! சித்திரவதை செய்யப்பட்டாரா? நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ!!!