×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மன்னிச்சிரு அம்மா... கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவியோடு தற்கொலை செய்து கொண்ட மகன்! உயிருக்கு போராடும் பேத்தி! அதிர்ச்சி சம்பவம்!

தெலுங்கானாவில் ஜாமின் கடன் விவகாரம் மனஉளைச்சலாக மாறி தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

Advertisement

கடன் மற்றும் ஜாமின் விவகாரங்கள் ஒருவரின் வாழ்க்கையை எவ்வளவு கொடூரமாக மாற்றிவிடும் என்பதை தெலுங்கானாவில் நடந்த இந்த சம்பவம் வலியுறுத்துகிறது. ஒரு குடும்பத்தின் கனவுகளை சிதைத்த இந்த நிகழ்வு, சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாமின் கடன் விவகாரம்

மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஹர்ஷா என்பவர், தனது நண்பருக்காக ஜாமின் கையெழுத்திட்டு ரூ.13 லட்சம் கடன் வாங்க உதவி செய்துள்ளார். ஆனால் அந்த நண்பர் கடனை திருப்பிச் செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் ஸ்ரீ ஹர்ஷாவிடம் பணத்தை கேட்டு தொடர்ந்து தகராறு செய்துள்ளனர்.

தொடர்ந்த மன உளைச்சல்

அவ்வளவு பெரிய தொகையை தன்னால் செலுத்த முடியாது என்ற நிலை உருவானதால், ஸ்ரீ ஹர்ஷா கடந்த சில நாட்களாகவே கடுமையான மன உளைச்சல் நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருந்தும், கடன் கொடுத்தவர்கள் அவரிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால், அவர் முற்றிலும் மனமுடைந்துள்ளார்.

இதையும் படிங்க: திருமணமான 4 மாதத்தில் கொடூரம்... மனைவி, மச்சினன் படுகொலை.!! இளைஞர் வெறி செயல்.!!

தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம்

இந்த நிலையில், “மன்னிச்சிரு அம்மா, சாவுக்கு காரணமானவர்களை விட்றாத” எனக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், இந்த தம்பதிகளுக்கு மூன்று வயது குழந்தை இருப்பது இந்த சம்பவத்தை மேலும் சோகமாக்கியுள்ளது.

குழந்தை உயிருக்கு போராட்டம்

தம்பதிகள் தற்கொலைக்கு முன், தங்கள் மூன்று வயது மகளுக்கும் விஷம் குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த குழந்தை உயிருக்கு போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று தம்பதிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த துயர சம்பவம், கடன் அழுத்தம் மனிதர்களை எவ்வளவு ஆழமான முடிவுகளுக்கு தள்ளுகிறது என்பதைக் காட்டும் சோகமான சம்பவம் ஆக அப்பகுதியில் பேசப்படுகிறது.

 

இதையும் படிங்க: கணவரை இழந்த மனைவிக்கு 7 வயது சிறுவன்! தாயை காதலித்து திருமணம் செய்த நபர் 13 நாட்களிலே சண்டை..... கோபத்தில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Telangana News #Loan Pressure #Family suicide #Mental stress #Crime Report
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story