×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எல்லாம் முதலில் வீடியோ எடுத்தாங்க.. முதலிலேயே காப்பாத்தியிருந்தா - ஆணவக்கொலையில் கணவனை இழந்த மனைவி குமுறல்.!

எல்லாம் முதலில் வீடியோ எடுத்தாங்க.. முதலிலேயே காப்பாத்தியிருந்தா - ஆணவக்கொலையில் கணவனை இழந்த மனைவி குமுறல்.!

Advertisement

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம், மர்பல்லியை சேர்ந்தவர் நாகராஜு (வயது 26). கனபூர் கிராமத்தை சேர்ந்தவர் சையது அஷ்ரின் சுல்தானா. இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பள்ளிப்பருவத்தில் இருந்து காதலித்து வந்துள்ளனர். 

இவர்களின் காதல் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இருதரப்புக்கும் தெரியவந்து எதிர்ப்பு கிளம்பவே, கடந்த ஜனவரியில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளது. இதனால் சுல்தானாவின் குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், புதன்கிழமை இரவில் நாகராஜு - சுல்தானா இருசக்கர வாகனத்தில் வருகையில், சுல்தானாவின் சகோதரர் முகமது, உறவினர் மசூத் அஹமது உட்பட 5 பேர் கும்பலுடன் சேர்ந்து நடுரோட்டில் நாகராஜுவின் மீது சரமாரி தாக்குதல் நடத்தி கொலை செய்தனர். இரும்பு கம்பியால் நாகராஜுவின் தலையில் பயங்கரமாக தாக்கி கொலை சம்பவம் நடந்தது. 

மனைவியின் கண்முன்னே கணவன் துடிதுடிக்க ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், சுல்தானா இதுகுறித்து பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், "எனது குடும்பத்தினர் கணவரை தாக்கியபோது, நான் காப்பாற்ற முயற்சித்தேன். மக்கள் இதனை முதலில் வீடியோ எடுத்தார்கள்" என்று வேதனைபட தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Telangana #Honor Killing #Wife #Pressmeet #India
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story