அழகிய முகம், இனிய பேச்சு! இன்ஸ்டாவில் ஆண்களுக்கு போடும் வலை! பெட்ரூமில் கேமரா! வெளியே மிரட்டும் கணவன்! கடனை அடைக்க செய்யுற வேலையை பாருங்க!
தெலங்கானா கரீம்நகரில் ஹனிட்ராப் மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் கைது. இன்ஸ்டாகிராம் மூலம் ஆண்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் பறித்த சம்பவம் பரபரப்பு.
சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி, நிரபராத ஆண்களை சிக்கவைக்கும் ஹனிட்ராப் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, தெலங்கானா மாநிலத்தில் நடந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய வலை
தெலங்கானா கரீம்நகரைச் சேர்ந்த தம்பதியினர், தங்களின் கடன் பிரச்சினையை சமாளிக்க சட்டவிரோத பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்து, ஆண்களுடன் நட்பு வளர்த்து, அவர்களை தனது அறைக்கு வரவழைத்துள்ளார். அங்கு அந்தரங்க தருணங்களில் இருக்கும்போது, அவரது கணவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார்.
மிரட்டலும் பணப்பறிப்பும்
பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி, சுமார் 1500 ஆண்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர். இந்த சைபர் குற்றம் மூலம் கிடைத்த பணத்தில் சொகுசு கார்கள் மற்றும் நிலம் வாங்கி, ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.
தொழிலதிபரின் துணிச்சல் புகார்
இந்த தம்பதியரின் வலையில் சிக்கிய ஒரு தொழிலதிபர், ஏற்கனவே 13 லட்சம் ரூபாய் இழந்த நிலையில், மீண்டும் மிரட்டல் வந்தபோது காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீஸார் அதிரடியாக செயல்பட்டு, தம்பதியரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அழகிய முகம், இனிய பேச்சு என்பதைக் கொண்டு சமூக வலைதளங்களில் வலைவிரிக்கும் நபர்களிடம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சம்பவம், ஆன்லைன் தொடர்புகளில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: அய்யோ.... சேமித்த மொத்த பணமும் போச்சு! பெத்த மகளே இப்படி அடிக்குறா.... அப்பாவுக்கு வந்த நிலைமைய பாருங்க!