இது வேற லெவல்; பிரச்சார பேருந்துகள் பிரத்தியேக லிப்ட்; பிஆர்எஸ் கே.சி.ஆரின் அசத்தல் செயல்.!
இது வேற லெவல்; பிரச்சார பேருந்துகள் பிரத்தியேக லிப்ட்; பிஆர்எஸ் கே.சி.ஆரின் அசத்தல் செயல்.!
2024 மக்களவை பொதுத்தேர்தலுடன், தெலுங்கு மொழி பேசும் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் மே 13ம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. அங்கு மாநில ஆளும்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியிடயே நேரடி அரசியல் மோதல் நிலவி வருவதால், கடுமையான போட்டித்தன்மை நிலவி வருகிறது.
வாக்காளர்களை கவர வாக்குறுதியில் இருந்து மேலோங்கி சென்று, மதுபான பாட்டில், கண்டம், இனிப்பு-காரம் மற்றும் பல ஆயிரம் என போட்டிபோட்டு பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாகவும் பல சர்ச்சை விடியோக்கள் வெளியாகி வைரலாகி வந்தன.
அதேபோல, தெலுங்கு பேசும் மற்றொரு முக்கிய மாநிலமான தெலுங்கானாவில், மே 13 அன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு மாநில அளவில் பாரதிய ராஷ்ட்ரிய சமேதி (பிஆர்எஸ்) கட்சியின் ஆட்சி அகற்றப்பட்டு, கடந்த 2023 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.
இதனால் கடந்த காலத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த பிஆர்எஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. அக்கட்சியின் மூத்த தலைவர் கே. சந்திரசேகர்ராவ் பின்னாட்களில் உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டானது.
இந்நிலையில், தற்போது பாராளுமன்ற தேர்தலுக்காக அவர் பொதுவெளியில் தோன்றி இருக்கிறார். நேற்று அங்குள்ள சூர்யபெட் பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த சந்திரசேகர் ராவ், தனது பிரத்தியேக பிரச்சார பேருந்தில் இருந்து, லிப்ட் உதவியுடன் பேருந்தின் மேல்தளப்பகுதிக்கு வந்து தொண்டர்களை பார்த்து கையசைத்து பேசினார்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.