×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விதவைப்பெண்கள் டார்கெட்.. 7 பெண்களுடன் மாதக்கணக்கில்., நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கர்ப்பமானதால் பரபரப்பு.!

விதவைப்பெண்கள் டார்கெட்.. 7 பெண்களுடன் மாதக்கணக்கில்., நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கர்ப்பமானதால் பரபரப்பு.!

Advertisement

திருமண தகவல் மையங்களில் விவாகரத்தான பெண்களை குறிவைத்து காமுகன் ஏமாற்றி அவர்களை திருமணம் செய்து போலியான குடும்பம் நடத்தி நகை, பணத்துடன் தப்பி சென்று கைதான சமபவம் அதிர வைத்துள்ளது. இதில், சில பெண்கள் கர்ப்பமாக இருப்பதாக தகவல் உறுதியாகி பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தை சார்ந்தவர் அடப்பா சிவசங்கர் பாபு. திருமண தகவல் மையங்களில் சிவசங்கர் தன்னை ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி இலட்சக்கணக்கில் சம்பாத்தியம் பார்க்கும் நபர் என பதிவு செய்து வைத்துள்ளார். மேலும், இவர் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ள இளம்பெண்களை குறிவைத்து காதல் வலை வீசியுள்ளார். 

அந்த பெண்களிடம் நம்பிக்கை பெரும் அளவு பேச்சிலேயே மயக்கி, அதனைத்தொடர்ந்து அவர்களை திருமணம் செய்வதாக நடித்து நகை மற்றும் பணத்தை பெற்று மாயமாகிடுவார் என்று கூறப்படுகிறது. இதனைப்போல, 7 பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்து ஏமாற்றி இருக்கிறார். 

பாதிக்கப்பட்ட பெண்கள் கணவரை தேடி பரிதவித்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் அனைவருக்கும் தாங்கள் ஒரே நபரால் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை பாதிக்கப்பட்ட பெண்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ள நிலையில், கச்சிபவுலி காவல் துறையினர் சிவசங்கரை கைது செய்தனர். 

இவனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிவசங்கரால் ஏமாற்றப்பட்ட பெண்களில் சிலர் கருத்தரித்து இருப்பதாகவும் தெரியவருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Telangana #Andra Pradesh #man #death #tamilnadu #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story