இறுதி மரியாதையில் கண்ணீருடன் கணவருக்கு சல்யூட் அடித்த விமானப் படை அதிகாரி மனைவி! தேசத்தை நெகிழச் செய்த விங் கமாண்டர் அஃப்சான்..!!
துபாய் ஏர் ஷோவில் தேஜஸ் விபத்தில் உயிரிழந்த நமாம்ஸ் சியாலுக்கு அவரது மனைவி அஃப்சான் சல்யூட் அடித்து அளித்த உணர்ச்சி மிக்க இறுதி மரியாதை குறித்து விரிவாக.
தேஜஸ் போர் விமானம் துபாய் ஏர் ஷோவில் நிகழ்ந்த விபத்து இந்திய ராணுவ சமுதாயத்தையே உலுக்கியிருக்கிறது. வீர மரணமடைந்த விங் கமாண்டர் நமாம்ஸ் சியாலின் தியாகம் மற்றும் அவரது குடும்பம் எதிர்கொண்ட உணர்ச்சி நொடிகள் நாடு முழுவதும் கவனம் ஈர்த்து வருகின்றன.
துபாய் ஏர் ஷோவில் சம்பவம்
நவம்பர் 21 ஆம் தேதி துபாயில் நடைபெற்ற ஏர் ஷோவில், இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் துரதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தை பாதுகாப்பான, மக்கள் வசிப்பிடமற்ற பகுதிக்குத் திருப்ப முயன்ற விமானி, விங் கமாண்டர் நமாம்ஸ் சியால் வீர மரணமடைந்தார். தனது உயிரை விட மக்கள் பாதுகாப்பை முதன்மைப்படுத்திய அவரது செயல் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது.
இறுதி மரியாதையில் கண்கலங்கிய மனைவி
அவரின் உடல் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட இறுதிச் சடங்கில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டபோது, அவரது மனைவியும் விமானப்படை அதிகாரியுமான விங் கமாண்டர் அஃப்சான், சீருடையில் கணவருக்குச் சல்யூட் அடித்து கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தினார். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, தேசம் முழுவதும் நெகிழ்ச்சியைக் கிளப்பியது.
இதையும் படிங்க: உடல் முழுவதும் குண்டூசியால் ரூபாய் நோட்டுகளை குத்தி ! மேளம் அடித்து விஜய்யை வரவேற்ற தொண்டர்! வைரலாகும் வீடியோ....
16 ஆண்டுகள் ஒன்றாக – துயரத்தில் திளைக்கும் குடும்பம்
நமாம்ஸ் சியாலும் அஃப்சான் இருவரும் இந்திய விமானப்படையில் அதிகாரிகளாகச் சேவை செய்த தம்பதியர். 16 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இவர்கள், தற்போது 7 வயது மகளின் பெற்றோர்கள். இந்த சோகச் சம்பவம் குடும்பத்தையே சிதறடித்த நிலையில், விமானியின் தந்தை, மனைவி மற்றும் மகளின் உணர்ச்சிமிகு புகைப்படங்கள் நாடு முழுவதும் பலரின் கண்களையும் கலங்கச் செய்துள்ளன.
தேஜஸ் விபத்தில் உயிரிழந்த நமாம்ஸ் சியால் காட்டிய கடமை உணர்வும், அவரது குடும்பம் வெளிப்படுத்திய உறுதியும் இந்தியாவின் ராணுவ வீரர்களின் தியாகத்தை மீண்டும் நினைவுபடுத்துகின்றன.