×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம்! துன்புறுத்தி வந்த ஆசிரியருக்கு கிராமத்தினர் கொடுத்த வேறலெவல் தண்டனை!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த ஆசிரியருக்கு கிராம மக்கள் மொட்டை அடித்து, முகத்தில்

Advertisement

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த ஆசிரியருக்கு கிராம மக்கள் மொட்டை அடித்து, முகத்தில் கரியை பூசி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் மண்பூர் என்ற கிராமத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 8ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஒருவர் காதல் கடிதம் கொடுத்துள்ளார்.

மேலும் தொடர்ந்து அந்த மாணவியை வற்புறுத்தி, துன்புறுத்தியும் வந்துள்ளார். அதுமட்டுமின்றி தனது காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் உனது குடும்பத்தினருக்கு ஆபத்து வரும் எனவும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து தெரியவந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துவந்த ஆசிரியரை மடக்கிபிடித்து அவருக்கு மொட்டை அடித்து முகத்தில் கரியை பூசி கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். 

இதுகுறித்து தெரியவந்த நிலையில் அங்கு விரைந்த போலீசார்கள் அத்தகைய செயலில் ஈடுபட்ட கிராமத்தினர் 10 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#love letter #torture
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story