×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபுடுச்சுட்டேன்! மருந்துபாட்டிலுடன் அசரவைத்த தமிழக மாணவன்!

Tamilnadu student said about finding medicine for coronovirus

Advertisement

சீனாவில் வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ்  தற்போது அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 360க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 22000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த கொடிய கொரோனா வைரஸால் பல நாடுகளும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் தங்கம் ஆகியோரின் மகன் இசக்கிராஜ். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவர் கையில் மருந்து பாட்டிலுடன், கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டேன் என  மாவட்ட ஆட்சியரை தேடிவந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த மாணவன் கூறுகையில், கொரோனா வைரஸால் சீனாவில் ஏராளமான பேர் உயிரிழந்துள்ளனர். இதனை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் என் பாட்டிகிட்ட ஐடியா கேட்டு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளேன். நான் ஏற்கனவே மூலிகைச்செடி மருத்துவம் தொடர்பான புத்தகங்களை படித்துள்ளேன்.

வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பப்பாளி இலை, சஞ்சீவி வேர், வெட்டிவேர் போன்ற 11 வகை மூலிகைகளை வெயிலில் காயவைத்து, அதை நீரில் கொதிக்கவிட்டு இறக்கி,வடிகட்டி  சேகரித்துள்ளேன். இந்த மூலிகை மருந்தை சாப்பிட்டால் வெள்ளையணுக்கள் அதிகமாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நோய் பரவுவதை கட்டுபடுத்தும் என அந்த மாணவன் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#medicine #tamil student #Coronovirus
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story