×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றதைபோல், கொரோனாவிலிருந்தும் விடுதலை பெறுவோம்! தமிழிசை சௌந்தரராஜன்.

Tamilizai soundarajan talk about independence day

Advertisement

நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தின விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  நம் நாட்டின் 74 வது சுதந்திர தினத்தன்று நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் வீர சரித்திரங்களை நினைவு கூர்ந்து அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஒவ்வொரு சுதந்திர தின உரையிலும் சிறப்பான திட்டங்களை அறிவித்து அதை சிறப்பாகவும் நிறைவேற்றி வருகிறார்கள்.

அந்நியர்களிடமிருந்து நம் நாடு விடுதலை பெற்றதை போன்று கொரோனாவிலிருந்து விடுதலை பெறுவோம். அனைவருக்கும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Independence day #Tamilizai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story