×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எங்களையா பிரிக்கிறீங்க... மாணவர்கள் மடியில் அமர்ந்து மாணவிகள் நூதன போராட்டம்.!

எங்களையா பிரிக்கிறீங்க... மாணவர்கள் மடியில் அமர்ந்து மாணவிகள் நூதன போராட்டம்.!

Advertisement

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் அமைந்துள்ளது சி.இ.டி  பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரி அருகே அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில்  மாணவ-மாணவிகள் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு, அரட்டை அடிப்பது வழக்கம்.

இந்தநிலையில், மாணவ, மாணவிகள் இப்படி அருகருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது பிடிக்கவில்லை என்பதற்காக பேருந்து நிழற்குடையில் உள்ள பெஞ்ச் போன்ற இருக்கைகள் அப்புறப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக தனித்தனியாக மூன்று இருக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டன. இது கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் சிஇடி கல்லூரியின் மாணவ, மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.  அந்தப் புகைப்படங்கள் வைரலானதால் மாணவர்கள் போராட்டம் நடத்திய இடத்துக்கு திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் சென்று ஆய்வு செய்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #protest
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story