×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்த 3 மாணவர்கள் உடல் சிதறி பலி: இன்ஸ்டா வைரல் மோகத்தால் சோகம்.!

தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்த 3 மாணவர்கள் உடல் சிதறி பலி: இன்ஸ்டா வைரல் மோகத்தால் சோகம்.!

Advertisement

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முசிதாபாத் மாவட்டம், சுதி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரயில்வே பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் மீது சம்பவத்தன்று 5 பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததாக தெரிய வருகிறது. 

அப்போது அவ்வழியாக ரயில் வந்த நிலையில், மூவர் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த இவர்களின் இரண்டு நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் அமாவ் ஷேக் (வயது 14), ரியாஷ்ஷேக் (வயது 15), சம்யுன் ஷேக் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் தண்டவாளத்தில் இருந்தபடி ரீல்ஸ் செய்த போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தனர். 

ரயில் ஓட்டுநர் அவர்களை அங்கிருந்து செல்ல கூறி எச்சரிக்கை ஒலி எழுப்பியும் பலன் இல்லை. ரீல்ஸ் மோகத்தில் தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிலர் செய்யும் விஷயங்கள் உயிரை பறிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #Instagram Reels #Boys dead #Student Dead #west bengal #மேற்கு வங்கம் #இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் #train accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story