×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொடுமையின் கொடூரம்.. படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுமி.! துடிதுடிக்க அந்த இடத்தில் வளர்ப்புதாய் செய்த காரியம்!!

கொடுமையின் கொடூரம்.. படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுமி! கதறி துடிக்க வளர்ப்புதாய் செய்த காரியம்!!

Advertisement

தத்தெடுத்து வளர்த்து வந்த 9 வயது பெண் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த வளர்ப்புத் தாய் சிறுமியின் பிறப்புறுப்பில் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த 40 வயது நிறைந்த பெண் ஒருவர் 9 வயதுமிக்க பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கு அவர் உறவினராவார். இந்நிலையில் அண்மையில இரவில் சிறுமி உறங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வளர்ப்பு தாய் சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் சிறுமியின் பிறப்புறுப்பிலும் சூடு வைத்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து அறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அந்த சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் சிறுமியிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக பெற்று வளர்ப்புத்தாய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாநில குழந்தைகள் நலக் கமிட்டி தலைவர் கூறுகையில், சிறுமியின் தலை முடி பிடுங்கப்பட்டுள்ளது. உடல் முழுதும் நகத்தால் கீறிய தடங்கல் உள்ளது. சிறுமி விரைவில் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார் என  கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#urine #bed #Step mother
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story