இருசக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் துடிதுடித்து பலி... மின் கம்பி அறுந்து விழுந்ததால் நேர்ந்த சோகம்.!
இருசக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் துடிதுடித்து பலி... மின் கம்பி அறுந்து விழுந்ததால் நேர்ந்த சோகம்.!
கர்நாடக மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததால் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள சின்சலாகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர் தும்கூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 22 ஆம் தேதி மாலை தனது பணி முடிந்து சென்று கொண்டிருந்தார்.