அடக்கொடுமையே.. வயிற்றுவலியால் துடிதுடித்த பெண்! பரிசோதனையில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!!
சென்னை வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்தவர் நீலவேணி. 46 வயது நிறைந்த அவர் வீட்டு வேலை பார்த
சென்னை வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்தவர் நீலவேணி. 46 வயது நிறைந்த அவர் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலி ஏற்பட்டு நீலவேணி பெரம்பூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு நீலவேணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாக கூறி அதை நீக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் ஒரு சில நாளிலேயே நீலவேணிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் அதே மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் பொறுப்பின்றி பதிலளித்து அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நீலவேணி ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் ஏதோ இருப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது வயிற்றில் பஞ்சு வைத்து தைக்கபட்டது தெரியவந்தது.
மேலும் இதற்கு முன்னர் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையில், பஞ்சு வைத்து தைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதனை அகற்றிய வீடியோவையும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நீலவேணி தவறான சிகிச்சை செய்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362