×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கங்குலிக்கு லேசான மாரடைப்பு.. திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேற்கு வங்காளத்தில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கங்குலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கங்குலிக்கு லேசான இருதயக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு விரைவில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "கங்குலி லேசான இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கேட்டு வருத்தமாக இருக்கிறது, அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய விரும்புகிறேன் என்றும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன!" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ganguli #Ganguli health update #Savuravu Ganguli heart attack
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story